ஓர் இரவுக்
கனவில்
என் விலங்குகள்
வெட்டி
விண்ணில் ஏறினேன்,
காற்றின் திசையில்
கட்டற்றழைந்தேன்,
புயலில் சுழன்று
தென்றலில் தவழ்ந்தேன்..
தோட்டங்கள்
கடந்தேன்,
பூக்களில்
அமர்ந்தேன்..
நிசப்த இரவில்
நிதானமாய் வீழ்ந்தேன்
வீழ்ந்த போது
விளங்கியது
வெட்டியது
விலங்குகளல்ல...
வேர்கள்.
No comments:
Post a Comment