Sunday 26 May 2013

நீள் இரவின் விழிப்பில்..

சில சமயங்களில் 
சிக்கிக்கொள்கிறேன் 
அந்த 
சுவற்று மூலை 
சிலந்தி வலைக்குள்.

பின்னல்களினூடே 
ஒட்டிக்கொள்கிறது 
எனது  விழிப்பார்வை 
விதி தெரியாமல் 
வந்த ஒரு 
விட்டில் பூச்சியாய்..

எட்டு கால்களிடையே 
இரையாகிவிட்டது 
எண்ணச்  சுழற்சி.

விடுபட்டு 
வெளிவரும் பொழுதில் 
ஒட்டடையாகிவிடும் 
சிந்தனைகள்..
அந்த சிலந்தி 
தொலைத்த 
சின்ன வலைபோல்..



No comments:

Post a Comment